குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம்: டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் இடம்பெற்றமையை தொடர்ந்து, பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டமையினால்   144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் மோதல் ஏற்பட்ட  சீலாம்பூர், ஜாபராபாத் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் போராட்டங்களில் வன்முறை நிகழ்ந்து வருகிறது. சீலாம்பூரில் 2பொலிஸ் சோதனை சாவடிகளுக்கு தீ வைக்கப்பட்டதுடன் 2 பொலிஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன.

கிழக்கு டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாற பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்கள் 21 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *