நடிகர் அஜித் வீட்டில் அரசு அதிகாரிகள் திடீர் சோதனை! பின்னணி உண்மை இதுவே

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அண்மையில் எடுக்கப்பட்டன. அஜித் இப்படத்தில் மாஸ் லுக்கில் இருப்பதால் ரகசியமாக எடுக்கப்படுகிறதாம்.

இந்நிலையில் சென்னையில் திருவான்மியூரில் உள்ள அஜித்தின் வீட்டில் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதில் அவரின் உதவியாளர் 3 நீள மலைப்பாம்பை வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால் அஜித்தின் தரப்பு இது உண்மையில்லை, சோதனை எதுவும் நடைபெறவில்லை, வதந்தி என கூறியுள்ளார்களாம்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *