றிஷாட்டுக்கு எதிராக விசாரணை

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் கடந்த அரசாங்கத்தில் வகித்த அமைச்சில் நடந்ததாக கூறப்படும் அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரச பணத்தை உரிமை நடைமுறைகளுக்கு புறம்பாக பயன்படுத்தியமை சம்பந்தமாக ஆரம்ப கட்ட விசாரணைகளை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற நவம்பர் மாதம் 16ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கு வாக்காளர்களை அழைத்துச் செல்ல அரச பணம் செலவிடப்பட்டிருப்பதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *