
வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல இஸ்லாமிய வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பெண்ணை குறித்த கடையின் உரிமையாளரின் மகன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் தமிழ் இளைஞர்கள் ஒன்றுகூடியதாலேயே இவ்வாறு பதற்றமான சூழல் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து, வர்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதனால் குறித்த பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டமையால் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கபடும் நபரையும் குறித்த பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதன் பின்னர் குறித்த பகுதி வழமைக்கு திரும்பியதாக மக்கள் தெரிவித்தனர்.


Leave a Reply