விவாகரத்து பற்றி மேடையில் உருக்கமாக பேசிய தொகுப்பாளினி டிடி

திரையுலகையும் தொலைக்காட்சியையும் சார்ந்தவர்கள் தங்களது வாழ்க்கை துணைகளை விவாகரத்து செய்யும் செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியான டிடியும் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

இந்நிலையில் தற்போது ஒரு விருது விழாவில் சிறந்த தொகுப்பாளினி என்று விருது பெற்று டிடி மேடையில் தன் வாழ்க்கையில் நடந்த துயரம் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். “நம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஏன் கல்யாணமான உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம். ஆனாலும் நாம் வழக்கம்போல காலையில் எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டு வேலைக்கு கிளைம்பினால், உங்கள் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது” என்று மனம் உருக பேசினார்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *