10 ஆண்டுகளின் பின்னர் தென்படவுள்ள சூரிய கிரகணம் – மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

10 ஆண்டுகளின் பின்னர் வானில் தென்படவுள்ள அரிய சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களினால் மாத்திரமின்றி, சாதாரண மற்றும் கறுப்பு நிற கண்ணாடிகளை பயன்படுத்தி பார்வையிடுவதும் ஆபத்தானது என வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, இதுபோன்ற ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என வானியல்துறை பேராசிரியரான சந்தன ஜயரத்ன, பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

வடக்கு பகுதிக்கு இந்த சூரிய கிரணம் முழுமையாக தென்படும் என்றும் மன்னாருக்கு மேல்திசையில் யாழ்ப்பாணம் வரையான பகுதிகளில் அந்த சூரிய கிரகணம் முழுமையாக தென்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தென் பகுதியில் இந்த சூரிய கிரகணம் பகுதி அளவிலேயே தென்படும் என்றும் எதிர்வரும் 26ஆம் திகதி காலை வேளையில் இந்த சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழுமையான சூரிய கிரகணம் காலை 8.10க்கு ஆரம்பமாகி முற்பகல் 11.25 அளவில் நிறைவடையும் என்றும் இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களினால் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என ஆர்த்தர் சி.க்ளாக் மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வெற்றுக் கண்களினால் மாத்திரமின்றி, சாதரண மற்றும் கறுப்பு நிற கண்ணாடிகளை பயன்படுத்தி பார்வையிடுவதும் ஆபத்தானது என வானியல்துறை பேராசிரியரான சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *