
உலக அழகி பட்டம் வென்ற பிறகு இந்திய சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் திருமணத்திற்கு நடிப்பதை நிறுத்திக்கொண்டாலும் தற்போது கடந்த சில ஆண்டுகளாக ஒருசில படங்களில் மட்டும் நடித்துவருகிறார். தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் அவர் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர்களது திருமண நாளுக்கு வாழ்த்து கூறவே அவர்கள் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராய்.
Leave a Reply