
கடந்த 2009ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சென்ற இலங்கை அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரை பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் வங்கதேச அணி பாதுகாப்பை காரணம் காட்டி நிராகரித்து விட்டதால், இந்தியாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான எஹ்மான் மானி.
அவர் கூறுகையில், எந்த அணி பாகிஸ்தான் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறதோ அந்த அணி அதனை நிரூபிக்க வேண்டும்.
இலங்கை தொடருக்கு பின்னர் எந்தவொரு நாடும் பாதுகாப்பு ஏற்பாட்டை பற்றி கவலைப்பட முடியாது, மீடியாக்களும், ரசிகர்களும் உலகளவில் பாகிஸ்தானை நேர்மறையாக காட்ட முக்கிய பங்காற்றினர்.
பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகமிக அதிகம் என தெரிவித்துள்ளார்.
Leave a Reply