43 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகும் ரணில்!

43 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைக்க தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், இந்த தீர்மானம் எடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாலிகாகந்த மகாபோதி விகாரைக்கு விஜயம் செய்தபோது வணக்கத்திற்குரிய பானாகல உபதிஸ்ஸ தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை அடைவது தொடர்பாக தான் உறுதியுடன் இருப்பதாகவும் இருப்பினும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது விடுமுறைக்காக இந்தியாவுக்கு சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *