இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர்.. இலங்கை அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்!

இலங்கைத் தேர்வாளர்கள் அடுத்த மாத இந்திய சுற்றுப்பயணத்திற்காக 20 வீரர்களைக் கொண்ட சாத்தியமான அணியைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என அறியப்படுகிறது.

விசாக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யவே சாத்தியமான வீரர்களை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்று இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சாத்தியமான அணி பட்டியலை, மூன்று தேர்வாளர்களான தேர்வுக்குழு தலைவர் அஷாந்தா டி மெல் , வினோதன் ஜான் மற்றும் சமிந்தா மெண்டிஸ் ஆகியோர் தேர்வு செய்தனர்.

இருப்பினும், தேர்வாளர்கள் புதிய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் அணித்தலைவர் ஆகியோரை சந்தித்து ஆலோசித்தவுடன் இறுதி பட்டியல் அறிவிக்கப்படும்.

இந்திய சுற்றுப்பயணத்தின் போது லசித் மலிங்கா அணியை வழிநடத்த வாய்ப்புள்ளது. சாத்தியமான வீரர்கள் பட்டியலில் அனுபவமிக்க வீரர் ஏஞ்சிலோ மேத்யூஸ் இடம்பிடித்துள்ளார்.

மேத்யூஸ் கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் கொழும்பில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி -20 போட்டியில் விளையாடினார்.

அதன்பிறகு அவர் தொடர்ந்து பந்து வீசவில்லை, ஆனால் இப்போது அவர் பந்துவீச்சைத் தொடங்கியுள்ளதால் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *