
தெற்கு கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கத்தை கடந்த ஒருவார காலமாக அவதானிக்க முடியவில்லை என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறுதியாக குறித்த கடல் சிங்கம், பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் அண்மையில் அவதானிக்கப்பட்டதாக அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த உயிரினத்தின் பாதுகாப்புக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் நான்கு குழுக்கள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி காலி – உனட்டுவன கடற்கரை பகுதியில் குறித்த கடல் சிங்கம் முதன்முறையாக அவதானிக்கப்பட்டது.
இதையடுத்து, சில சந்தர்ப்பங்களில் தென்மேற்கு கடற்கரை பகுதியில் அந்த கடல் சிங்கம் அவதானிக்கப்பட்டதது.
தென்னாபிரிக்காவுக்கு கீழ் திசையில் உள்ள மெரியட் தீவிலிருந்து கடல் நீரோட்டம் மூலமாகவோ அல்லது சமுத்திரத்தில் ஏற்பட்ட ஏதாவது ஒரு மாற்றம் காரணமாக குறித்த கடல் சிங்கம் இந்து சமுத்திரத்திற்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply