டிவி சேனல் எடுத்த அதிர்ச்சி முடிவு? ஈஸ்வர்-மகாலக்ஷ்மி விவகாரத்தால் வந்த சிக்கல்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேவதையை கண்டேன் சீரியலில் நடித்துவரும் ஈஸ்வர் மற்றும் மகாலக்ஷ்மி இருவருருக்கும் தவறான தொடர்பு இருக்கிறது என ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ புகார் கூறினார்.

அதனால் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார். அதன்பிறகு இருதரப்பும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சையால் அதிருப்தியான தனியார் தொலைக்காட்சி அந்த சீரியலை விரைவில் முடிக்க முடிவெடுத்துள்ளதாம். சீரியல் ஷூட்டிங் நடத்துவதில் சிக்கல் ஏற்படவில்லை என்றாலும், மக்கள் மனநிலை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

அடுத்து வேறு ஒரு சீரியல் தொடங்க திட்டமிட்டு வருகிறார்களாம்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *