காந்தியின் நாடு ஹிட்லர் வழியில் செல்கிறது – சிதம்பரம்

காந்தி நாடு தற்போது ஹிட்லர் பாதையில் செல்கிறது என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட 15 நாட்களில் மாபெரும் புரட்சி,  நாடு முழுவதும் நடந்து இருக்கிறது.

அதற்கு அரசியல் கட்சிகள் காரணமல்ல. இந்த போராட்டத்துக்கு மாணவர்களும்,  இளைஞர்களும் சொந்தக்காரர்கள் ஆவார்கள். நாடு முழுவதும் அவர்களாகவே முன்வந்து போராடுகிறார்கள். அரசியல் சாசனத்தின் அடிப்படை நெறிமுறைகளை காப்பாற்ற திரண்டு இருக்கிறார்கள்.

இதில் அரசியல் கட்சிகள் தோல்வியடைந்துவிட்டன. போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவிக்கிறேன். எல்லாப் பாகுபாடுகளையும் மறந்து மிகப்பெரிய புரட்சியை மாணவர்கள் செய்கிறார்கள். இது முஸ்லிம்களுக்கும், அரசுக்கும் நடக்கும் போராட்டம் அல்ல.

இந்த அரசு அப்படி சித்தரிக்கிறார்கள். இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும்,  அரசுக்கும் நடக்கும் போராட்டம் தான் இது. சரித்திரம் திரும்புகிறது என்று சொல்லும் அளவுக்கு ஜெர்மனியில் நடந்தது போல இந்தியாவிலும் நடக்கிறது. காந்தி நாடு ஹிட்லர் பாதையில் சென்று கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *