திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: மற்றுமொருவர் காயம்

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ரம்பேவ பகுதியை சேர்ந்த இந்திக பண்டார (40 வயது) என்பரே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த அக்கர சீய பகுதியை சேர்ந்த (18 வயது) ஆதம்பாவா முகம்மது றிப்னாஸ் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபரை பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் மோதியுள்ள நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *