எங்கள் அனைவருக்கும் இறைவனுடைய ஆசிர்வாதம் இருக்கும் – மன்னார் மறைமாவட்ட ஆயர்!

எங்கள் அனைவருக்கும் இறைவனுடைய ஆசிர்வாதம் இருக்கும் மட்டும் இந்த புத்தாண்டு பல புதிய நிகழ்வுகளை, புதிய வளங்களை பெற்றுத்தரும் ஆண்டாக அமைய வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘எங்களுக்கு புதிய ஆண்டு பிறந்து விட்டது. 2020 ஆம் ஆண்டிலே நாங்கள் கால் பதித்து விட்டோம்.

இந்த வருடம் என்ன விதத்திலே அமையுமோ? சரியாக அமையுமா அல்லது வௌ;வேறு சவால்களுக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டுமா? என்று சிந்திக்கலாம்.

ஆனால் எமது கிறிஸ்தவ அடிப்படை நம்பிக்கையின் மட்டில் நாங்கள் இந்த ஆண்டிலே இறைவன் எங்கள் அனைவரையும் ஆசிர் வதித்து புனிதப்படுத்தி எங்களை பாதுகாத்து வழி நடத்துவார் என்கின்ற எதிர் நோக்குடன் நாங்கள் வாழுவோம்.

கட்டாயமாக எங்கள் அனைவருக்கும் இறைவனுடைய ஆசிர்வாதம் இருக்கும் மட்டும் இந்த புத்தாண்டு பல புதிய நிகழ்வுகளை, புதிய வளங்களை பெற்றுத்தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

இறைவன் உங்கள் அனைவருக்கும் அவருடைய பாரிய அன்பினால் உங்களுக்கு அவசியமாக வேண்டியவற்றை நீங்கள் எதை நோக்கி முயற்சித்தக் கொண்டு இருக்கின்றீர்களோ அந்த நல்ல விடையங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *