
வவுனியா கல்குண்டாமடுவில் இடம்பெற்ற விபத்தில் 4பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றது.
கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கயஸ்ரகவாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் விரைவாக செயற்பட்டு வானில் இருந்து கீழே இறங்கியமையால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
குறித்த வானில் நான்கு பேர் பயணித்த நிலையில் சிறு காயங்களிற்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



Leave a Reply