இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மோடி கர்நாடகா விஜயம்!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வருகிறார்.

டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் பெங்களுர் வரும் அவர்,  விமான நிலையத்தில் இருந்து ஹெலிகொப்டர் வழியாக தும்கூரு புறப்பட்டு செல்கிறாா்.

பின்னா்  தும்கூரில் உள்ள அரசு இளநிலை கல்லூரி மைதானத்தில் மாலை 3 மணிக்கு கா்நாடக பாஜகவின் விவசாயி அணி சாா்பில் நடக்கவிருக்கும் வேளாண் விருது,  மீன்பிடி கருவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறாா்.

அதன்பிறகு பெங்களூரு திரும்பும் பிரதமா் மோடி  இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு சென்று பாா்வையிடுகிறாா்.

அங்கு விஞ்ஞானிகளைச் சந்தித்த பிறகு,  அன்றிரவு ஆளுநா் மாளிகையில் தங்குகிறாா். மறுநாள்  பெங்களூரு ஜக்கூரில் உள்ள காந்தி வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் நடக்கும் 107ஆவது இந்திய அறிவியல் காங்கிரஸ் விழாவில் கலந்துகொண்ட பிறகு,  நண்பகல் 2 மணிக்கு மீண்டும் டெல்லி செல்லவுள்ளார்.

பிரதமா் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *