வடக்கு ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்றார் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

வடக்கு, மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், தனது கடமைகளை இன்று (வியாழக்கிழமை) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வருகை தந்த ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

மதத் தலைவர்களின் ஆசிகளைத் தொடர்ந்து தனது செயலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கடந்த திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக அவர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றறுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *