வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி ராஜித மனு தாக்கல்

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதற்கமைய அவர் குறித்த மனுவை தனது சட்டத்தரணியுடாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ராஜித்த சேனாரட்ன தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து நேற்று சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜித அண்மையில் கைத செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.

அத்துடன் ராஜித்த சேனாரட்னவுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதவான் பயணத் தடை விதித்திருந்ததுடன், அவரது கடவுச் சீட்டை நீதிமன்றின் பொறுப்பில் வைத்திருக்கவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *