ஓட்டமாவடி வீடொன்றில் அதிசய வாழைமரம்! பார்க்க படையெடுக்கும் மக்கள்!

ஓட்டமாவடி வீட்டுத்தோட்டமொன்றில் வளர்க்கப்பட்ட வாழை மரமொன்று, வழமைக்கு மாறான முறையில் அதிசயமாக காய்த்துள்ளது.

இந்த அதிசய வாழைமரம் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மஜ்மாநகரில் உள்ள வீடொன்றிலேயே உள்ளது.

குறித்த வாழி மரத்தில் இரு வாரத்துக்குமுன் சிறிய வாழைப்பூ வெளிப்பட்டிருந்த நிலையில் தற்போது அது பெரிய வடிவில் ஒரே ஒரு வாழைக்காயுடன் மாத்திரம் காய்த்து நிற்கின்றது.

இந்நிலையில் கோழிக்கூடு வாழை வகை கொண்ட இவ் அதிசய வாழைமரத்தைப் பார்வையிட பொதுமக்கள் அவ்வீட்டிற்கு படையெடுத்து செல்கின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *