
ஈராக்கின் நிலைமை குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மற்றும் ஜேர்மனி அதிபர் மெர்க்கல் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ஈராக்கில் கூட்டுப் படைகள் மீதான சமீபத்திய தாக்குதல்களை நாங்கள் கண்டித்துள்ளோம்.
மேலும், தளபதி சுலைமானியின் கட்டளையின் கீழ் ஐ.ஆர்.ஜி.சி மற்றும் அல்-குட்ஸ் படை மூலம், ஈரான் பிராந்தியத்தில் எதிர்மறையாக செயல்பட்டுவந்தது குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.
தற்போது ஈராக்கில் பதற்றத்தை குறைக்க வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரையும் மிகுந்த கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் கடைப்பிடிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
ஈராக்கில் தற்போதைய வன்முறை சுழற்சியை நிறுத்த வேண்டும். மேலும், குறிப்பாக ஈரானை வன்முறை நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
JCPOA 2015 உலக சக்திகளுடனான அனுசக்தி ஒப்பந்தத்துடன் பொருந்தாத அனைத்து நடவடிக்கைகளையும் திரும்ப பெறுமாறு ஈரானை வலியுறுத்துகிறாம்.
ஈராக்கின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் நினைவுபடுத்துகிறோம். மற்றொரு நெருக்கடி அபாயங்கள், நிலையான ஈராக்கை உருவாக்கும் பல வருட முயற்சிகளை ஆபத்திற்கு உட்படுத்துவதாகவும்.
ஐ.எஸ்-க்கு எதிரான போராட்டத்தைத் தொடர எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம், இதுவே அதிக முன்னுரிமையாக உள்ளது.
இது தொடர்பாக கூட்டுப்படையின் பாதுகாப்பு முக்கியமானது. எனவே ஈராக் அதிகாரிகளுக்கு கூட்டுப்படைக்கு தேவையான அனைத்து ஆதரவையும் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பதட்டங்களைத் தணிப்பதற்கும் பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கும் பங்களிப்பதற்காக அனைத்து தரப்பினருடனும் எங்கள் ஈடுபாட்டைத் தொடர நாங்கள் தயாராக இருக்கிறோம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Leave a Reply