
எதிர்வரும் 10ஆம் திகதி வரும் பௌர்ணமி தினத்தில் அரைகுறை சந்திர கிரகணம் தென்படும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இதுவாகும். வெள்ளிக் கிழமை இரவு 10.37 அளவில் ஆரம்பமாகும் சந்திர கிரகணம் மறுநாள் அதிகாலை 2.45 மணியளவில் முடிவடையும். ஓநாய் சந்திர கிரகணம் என நாசா நிறுவனம் இதற்கு பெயரிட்டுள்ளது.
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியன ஒரே நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்தாண்டு மேலும் மூன்று சந்திர கிரகணங்கள் ஏற்பட உள்ளன. ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆம் திகதிகளில் இந்த சந்திர கிரகணங்கள் ஏற்படவுள்ளன.
Leave a Reply