
கச்சத்தீவு திருவிழாவில் இம்முறை இலங்கை மற்றும் இந்தியர்கள் 9 ஆயிரம் பேர் பங்குகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் கச்சத்தீவு திருவிழா ஏற்பாடுகள் சம்மந்தமான கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கச்சத்தீவு ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாவிற்கு கடற்படையினரின் உதவி மிக முக்கியமான ஒன்றாகும். ஆழ்கடல் போக்குவரத்திற்கு அவர்களின் உதவி இன்றியமையாததாகும் என தெரிவித்தார்.
இதன்படி திருவிழாவிற்கு முதல் நாளான 6ஆம் திகதி அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 11 மணிவரைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் வரை பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அன்று காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரைக்கும் குறிகாட்டுவானில் இருந்து கச்சத்தீவு நோக்கிய படகு சேவையும் நடைபெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த முறை திருவிழாவிற்கு இந்தியாலில் இருந்து மட்டும் 3 ஆயிரம் பேரும் இலங்கையில் இருe;து 6 ஆயிரம் பேரும் கலந்துகொண்டனர். இதேபோன்று இம்முறையும் 9 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

Leave a Reply