சிங்கப்பூர் அமைச்சர் இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு

சிங்கப்பூர் அரசாங்கத்தின் உள்நாட்டு விவகாரம் மற்றும் சட்டம் தொடர்பான அமைச்சர் கே.சண்முகம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதற்கமைய அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். மேலும் அவருடன் ஐந்து பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வந்துள்ள அமைச்சர் கே.சண்முகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்தரையாடவுள்ளார்.

அத்தோடு இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல தரப்பினரை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *