பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு

பதுளை – பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 40 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றது.

பசறை பகுதியிலிருந்து எக்கிரிய பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு பாரிய வளைவு பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவருடன் 12 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.  விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *