கொழும்பிலிருந்து பயணித்த புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் திருகோணமலை – கொட்பே பகுதியைச் சேர்ந்த உபுல் சமிந்த (39 வயது) என்பவரே உயிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் கொட்பே பகுதியில் புகையிரத தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *