
ஈரான் தளபதி காஸிம் சுலைமானியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்திய எம்.கியூ.9 ரீப்பர் ( MQ 9 Reeper) ரக ட்ரோன்களை கொள்வனவு செய்ய இந்தியா நீண்டநாள் முயற்சித்து வரும் நிலையில், இதற்கான பலன் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் குறித்த ட்ரோன்களை கொள்வனவு செய்ய இந்தியா விருப்பம் தெரிவித்தது.
இந்த நிலையில் தலா 460 கோடியே 70 இலட்சம் ரூபாய் விலையில், 10 ட்ரோன்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் எந்த இலக்கையும் தாக்குவதுடன், சீன எல்லைப்புறங்களில் இந்தியாவின் பாதுகாப்பை அதிகரிக்கவும் இவை மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுமார் 50 ஆயிரம் அடி உயரம் வரை பறந்து, இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்த ட்ரோன்களை அமெரிக்காவின் ஜெனரல் அட்டோமிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ட்ரோன்களால் தொடர்ச்சியாக 27 மணி நேரம் பறக்க முடியும்.
Leave a Reply