மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க நியமனம்!

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் இதற்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான வீரசிங்க, கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1976ம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து சட்டத் தொழிலில் இணைந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *