இலங்கை செல்லும் மாலைத்தீவு பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

இலங்கைக்கு செல்லும் மாலைத்தீவு பிரஜைகள் இலங்கையில் இருக்கும் காலத்தில் தமது வீசா மற்றும் கடவுச்சீட்டுக்களின் காலமுடிவுகள் தொடர்பில் பரீட்சித்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மாலைத்தீவு அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு விடுத்துள்ளது.

இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் ஆவணங்களை இலங்கை அரசாங்கம் பரீட்சிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனையடுத்தே இந்த கோரிக்கையை மாலைத்தீவு அரசாங்கம் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது தமது கடவுச்சீட்டுக்களையும், உரிய ஆவணங்களையும் எடுத்து செல்லுமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *