சர்வமதத் தலைவர்களை சந்தித்தார் வடக்கு ஆளுநர்!

வடக்கு மாகாண ஆளுநர்  பி.எஸ்.எம். சார்ள்ஸ்,  நல்லை ஆதீன குருமுதல்வர்,  யாழ்ப்பாணம் நாக விகாரை விகாராதிபதி மற்றும் இஸ்லாமிய மௌலவி ஆகியோரை சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த சந்திப்பு  நேற்று (வியாழக்கிழமை)  மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது வட மாகாணத்தில் தன்னால் முன்னெடுக்கப்படவுள்ள பணிகளை சர்வமத தலைவர்களுக்கு எடுத்துரைத்த ஆளுநர், வட மாகாணத்தின் நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர்  பி.எஸ்.எம். சார்ள்ஸ் கடந்த 2ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரை நேற்று முன்தினம் சந்தித்து ஆசி பெற்றிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *