
துணை முதலமைச்சரை தொடர்ந்து தி,மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த “இசட் பிரிவு” எனப்படும் மத்திய ரிசர்வ் பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அச்சுறுத்தலின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்குகிறது.
இந்தநிலையில், கடந்த 6-ம் திகதி தமிழக காவல் துறை அதிகாரிகளுடன், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்படுகிறது.
அவருக்கு மாநில பொலிஸ் சார்பில் துப்பாக்கி ஏந்திய “லு” பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட ‘இசட் பிரிவு’ பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply