குரல் பதி­வு­க­ளை இணையத்தில் வெளியிடுங்கள்: ரஞ்சனிடம் ஜாதிக ஹெல உறு­மய வலியுறுத்தல்

அரசியல் நலனுக்காக எவரும் குரல் பதிவுகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளமையினால்  பதிவு செய்­யப்­பட்­டுள்ள அனைத்து குரல் பதி­வு­க­ளையும் இணை­யத்தில் வெளி­யி­டு­மாறு ரஞ்சன் ராம­நா­யக்­க­வுக்கு ஜாதிக ஹெல உறு­மய கோரிக்கை விடுத்­துள்­ளது.

பத்­த­ர­முல்­லையில் ஜாதிக ஹெல உறு­மய அமைப்பின் ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய  ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊடகப் பேச்­சாளர் நிசாந்த ஸ்ரீ வர்­ண­சிங்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வெளி­யா­கி­யுள்ள குரல் பதி­வு­களில் பல்­வேறு தரப்­பினர் சம்­மந்­தப்­பட்டுள்­ளதை மக்கள் தற்­போது நன்கு அறிவார்கள்.

எனினும் குறித்த குரல் பதிவுகளை  சிலர் தங்களது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தி கொள்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து குரல் பதிவுகளையும் மக்கள் அறிந்துகொள்ளும் விதமாக இணையத்தில் பதிவேற்றுவதே சிறந்தது.

அதாவது  ரஞ்சன் ராம­நா­யக்­கவின் ஒரு இலட்சத்து 21ஆயிரத்துக்கும் அதி­க­மாக குரல் பதி­வுகள் வேறு தரப்­பு­க­ளுக்கு கிடைக்கப் பெற்றால் அதனை தவ­றாக பயன்­ப­டுத்­து­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.

ஆகவே  இந்த விட­யத்தில் அவர் உரிய வகையில் செயற்­பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *