
உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஸரீப் அமெரிக்கா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் விமானம் தொடர்பில் ஈரான் விசாரணை மேற்கொண்ட ஈரான் ஆயுதப்படை, சம்பவத்தன்று ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய இடங்களை அமெரிக்கா குறிவைப்பதாக தகவல்கள் கிடைத்தது. இதனால், ஈரான் மிகுந்த எச்சரிக்கையுடன் வான்வெளியை கண்காணித்து வந்தது.
இத்தகைய சிக்கலான சூழ்நிலைகளில், கோமெய்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரேனிய ஏர்லைன்ஸின் விமானம் , ஐ.ஆர்.ஜி.சியின் முக்கியமான இராணுவ மையத்திற்கு அருகே பறந்தது.
விமானம் உயரத்தில் மர்மமாக பறந்ததால் விமானம் தற்செயலாக மனித பிழையால் தாக்கப்பட்டது, துரதிர்ஷ்டவசமாக நண்பர்கள் மற்றும் பல வெளிநாட்டினரின் மரணத்திற்கு காரணமாகிறது என ஈரான் ஆயுதப்படை தலைமையகம் முதற்கட்ட விசாரணை முடிவில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து ட்விட் செய்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஸரீப், ஒரு சோகமான நாள்.
ஆயுதப்படைகளின் உள் விசாரணையின் முதற்கட்ட அறிக்கையில்: அமெரிக்காவின் சாகசத்தால் ஏற்பட்ட நெருக்கடியின் போது ஏற்பட்ட மனித பிழையே பேரழிவிற்கு வழிவகுத்தது என தெரியவந்துள்ளது.
Leave a Reply