
கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 9 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்ப முரண்பாடு காரணமாக கணவனால் குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான கணவன் அந்த பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply