
யாழ்.வடமராட்சி கிழக்கு- குடத்தனை பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிாிவுக்கு வீடு கொடுத்தவா் மீது மிளகாய் தூள் வீசப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன், கடையிலிருந்த பொருட்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, குடத்தனை பகுதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற இனந்தொியாத குழு ஒன்று வா்த்தக நிலைய உாிமையாளருக்கு மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடாத்தியதுடன்,
வா்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை திருடி சென்றிருக்கின்றனா். குறித்த வா்த்தக நிலைய உாிமையாளா் மணல் கடத்தலை தடுப்பதற்கான சிறப்பு பொலிஸ் பிாிவுக்கு வீடு வாடகைக்கு வழங்கியவா் என்பதுடன், அதனை ஒட்டியே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தை தொடா்ந்து அப்பகுதியில் பொலிஸாா் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது.
Leave a Reply