பதவி நீக்கம் செய்யப்பட்டார் சந்திரிக்கா – அறிவிப்பினை வெளியிட்டார் தயாசிறி!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்றைய தினம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கிருந்தது.

இதன்போது இரு தரப்பிற்கும் இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தன.

குறிப்பாக நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாகவும் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அத்துடன், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *