
வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் செலுத்திய பல சாரதிகளிற்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள விபத்துக்களை கருத்தில் கொண்டு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் வாரத்திற்கு ஒருநாள் விஷேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) வவுனியா ஏ-9 வீதியில் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓட்டியமை, அதிக சத்தமுடைய ஹோர்ன் பயன்படுத்தியமை, வாகனம் செலுத்தும் போது தொலைபேசி பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன், வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
இதேவேளை பாதசாரிகள் மற்றும் வாகனசாரதிகளிற்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக தெளிவூட்டல்களையும் பொலிஸார் வழங்கியிருந்தனர்.


Leave a Reply